தென்காசி, சூலை 26:
தென்காசி மாவட்டம் சிவகிரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 167 நபர்களுக்கு ரூ.16.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி தேவர் மஹாலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.டி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 167 பயனாளிகளுக்கு ரூ.16.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்:-
தமிழக முதல்வர் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 154 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 167 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”; என்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்திற்கிணங்க, பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் ஆகியோரின் சமுக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
அதுமட்டுமல்லாது ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை வசதிகளையும், வருவாய்துறை முலம் இலவச விட்டுமனை பட்டாவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையவேண்டும்;.
மேலும், கொரோனா 3-ம் அலை பரவ வாய்ப்புள்ள இச்சூழ்நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டும், பொதுமக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்தும், சமுக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்.
வருவாய்த்துறையின் சார்பில் 47 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.47000- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 23 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.23000- மதிப்பீட்டில் விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.5000- மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும்,
2 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000- மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 24 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.24000- மதிப்பீட்டில் முதிர்கன்னிகள் உதவித்தொகைக்கான ஆணைகளையும்,
15 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 வீதம் ரூ.3,37,500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.24,000- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.82,500 வீதம் ரூ.5,77,500- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1660 வீதம் ரூ.3,320- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,350 வீதம் ரூ.16,050- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2,00,000- மதிப்பீட்டில் வீடு பழுது நீக்கம் செய்தல் பணிக்காகவும், 1 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டில் மயானத்திற்கு ஆழ் துளை கிணறு வசதி அமைப்பதற்காகவும்,
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தேசிய நுண்ணுயிர் பாசன திட்டத்தின்; 1 பயனாளிக்கு ரூ.2,000 மதிப்பீட்டிலான கோனாவெட்டர் கருவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.36,000 மதிப்பீட்டிலான ரோட்டாவெட்டர் கருவிகளையும், 1 பயனாளிகளுக்கு ரூ.3,000 மதிப்பீட்டில் கைத்தெளிப்பான் கருவிகளையும்,
தோட்டகலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,200 வீதம் ரூ.26,400 மதிப்பீலான எலுமிச்சை பரப்பு விரிவாக்கமும், 1 பயனாளிக்கு ரூ.87,500 மதிப்பீட்டிலான வெங்காயம் சேமிப்பு கூடம் அமைப்பதற்கும் ஆகமொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.16,14,270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஷிலா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செல்லத்துரை,
வாசு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் ய, தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப் பாண்டியன், பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் கற்பக விநாயகம், வாசு., சரவணக்குமார், புளியங்குடி நகர செயலாளர் ராஜகாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, வேலம்மாள், சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் அரசப்பன், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மனோகரன், பூமிநாதன், வீரமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேல்,
சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார்கள் சண்முகத்தாய், செல்வகுமார், சரவணன், கருத்த பாண்டியன், அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், புளியங்குடி பத்திரம் சாகுல்ஹமீது, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மாடசாமி, நல்லசிவன், முத்தையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரித்துரை, கட்டபொம்மன், செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே