தென்காசி, சூலை 23:
தென்காசி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டீசல், பெட்ரோல், விலை உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளை கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாரிச்செல்வம், துணை செயலாளர் குமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே