தென்காசி, ஆக. 6:
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 193 நபர்களுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் எஸ்.எஸ்.என்.திருமண மஹாலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 193 பயனாளிகளுக்கு ரூ.7.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி: வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 193 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்”; என்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்திற்கிணங்க, பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகையும், பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
அதுமட்டுமல்லாது ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை வசதிகளையும், வருவாய்துறை முலம் இலவச விட்டுமனை பட்டாவும் அதுபோல ஊரக வளர்ச்சித்துறையிலும் இலவச வீட்டுமனைத்திட்டங்கள் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; தெரிவித்துள்ளார்.
விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.41,000/- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 24 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.24000/- மதிப்பீட்டில் விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3,000/- மதிப்பீட்டில் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.11,000/- மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும்,
2 பயனாளிகளுக்கு ரூ.2000 மதிப்பீட்டில் முதிர்கன்னி உதவித்தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.45,000/- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும் 1 பயனாளிகளுக்கு ரூ.2250/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும், கழுநீர்குளம் 10 பயனாளிகளுக்கும், குத்தப்பாஞ்சான் 20 பயனாளிகளுக்கும், நெட்டுர் 60 பயனாளிகளுக்கும் மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.5,43,280/- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், சமூக நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.16,050/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,865/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், தோட்டகலைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.87,500/- மதிப்பீட்டிலான வெங்காயம் சேமிப்பு கூடம் அமைப்பதற்கும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஆகமொத்தம் 193 பயனாளிகளுக்கு ரூ.7,80,945/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் (பொ) ராஜமனோகரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே