நெல்லை, அக்.1:
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணியிலிருந்த போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் வழங்கினார்.
கடந்த 19.08.2019 அன்று பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் ஆறுமுகம் 29.11.2019 அன்று விபத்தில் காலமானார்.
மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து குடும்பத்திற்கும், இரண்டாம் நிலை காவலர் ஆறுமுகம் குடும்பத்திற்கும் ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/