தென்காசி, செப். 2-

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம்- நெற்கட்டும்செவலில்  விடுதலை போராட்ட
வீரர் மாவீரன் பூலித்தேவன் 306-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்
 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன்; 306-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம்   அரசு விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி, நெற்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் கி.பி.1715 -ம் ஆண்டு ஆவணித்திங்கள் 16-ம் நாள் சித்திரபுத்திரதேவர், சிவஞான நாச்சியார் இருவருக்கும் மகனாகப்பிறந்தார். மாவீரன் பூலித்தேவன் அஞ்சாநெஞ்சராகவும், நிகரற்ற போர்வன்மை படைத்தவராகவும், திகழ்ந்து வந்தார். வீரமும் வலிமையும் மட்டுமின்றி அவர் நேர்மையும், பண்பும் நிறைந்தவர். மேலும், தன்மானமும், சுதந்திரவேட்கையும் கொண்டு திகழ்ந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார்;, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாவீரன் பூலித்தேவன்; திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன்  நினைவுமண்டபத்தினை பார்வையிட்டு, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
இவ்விழாவில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/