தென்காசி, சூலை 16:
சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதர்களுக்கான ஆன்லைன் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அளவில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர்களுக்கான போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தனர். வணிக மேம்பாடு, தலைமைத்துவம், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு திறன்களை மாணவர்கள் கற்றுக் கொண்டனர். சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை ஆன்லைன் மாநாடு 57.0-இன் நடைபெற்றது. இம்மாநாட்டில் தென் சீன கடல் தகராறு, இனவெறியை எதிர்த்துப் போராடுவது, இனவெறி மற்றும் தொடர்புடைய சகிப்பின்மை, சுத்தமான நீர் மற்றும் நல்ல சுகாதார பராமரிப்புக்கான சுகாதாரம், தொற்று நோய்களில் மின் கற்றலுக்கான அணுகலை அதிகரித்தல், மேம்படுத்துதல், அகதிகளுக்கான வேலை வாய்ப்புகள், மனநல சுகாதார செயல் திட்டம், கவனிப்பு மற்றும் சிகிச்சையை ஊக்குவித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை தணிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவை குறித்து கருத்துரு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.ஜி.லெட்சுமி, பேச்சியம்மாள் தேவி, பெரிய முத்துக்குமார், ஆப்ரகாம் சாமுவேல், அஜய்குமார், ஆசிரியை திவ்யா லட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் இவர்களில் ஆபிரகாம் சாமுவேல், அஜய்குமார் ஆகியோர் சிறப்பு சலுகைகளைப் பெற்றனர்.
இவர்களுக்கு சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத் தலைவர் மொஹ்னீஷ் பரத்வாஜ் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதர்களுக்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
நிருபர் நெல்லை டுடே