தென்காசி, ஆக. 24:
செங்கோட்டை அருகே கேரள எல்கையில் மேற்குத்தொடர்ச்சி மலை ரயில் தண்டவாளத்தில் திடீர் என மண் சரிந்து விழுந்ததால் அவ்வழியே செல்லும் ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக- கேரள மாநில எல்லையான செங்கோட்டை அருகே புளியரையை அடுத்த தென்மலை 4-வது ரயில்வே குகை அருகில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்கள்இ மண் சரிந்து விழுந்தன.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள்இ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை எடமண் ரெயில் நிலையத்தில் நிறுத்தினர். இதேபோன்று நெல்லையில் இருந்து பாலக்காட்டுக்கு சென்ற ரெயிலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தினர்.
தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கற்கள்இ மண்ணை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சீரமைப்பு பணி முடிந்தவுடன் சுமார் 5 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.
நிருபர் நெல்லை டுடே