நெல்லை,  டிச.7:

நெல்லை மாவட்ட எஸ்பி ஆக  இருந்த மணிவண்ணன், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை போலீஸ் நிர்வாகத்துறை எஸ்பி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்பி யாக நியமிக்கப்பட்டார். புதிய மாவட்ட  எஸ்பி சரவணன்  மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கூலிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnpolice.tn.gov.in, https://www.tirunelveli.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today