தென்காசி , சூலை 18 –

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வரும் பயணிகளை அந்தந்த ரயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்த பின்பு வெளியில் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இதற்காக ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ குழுவினர் திருவனந்தபுரம், குருவாயூர், பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை  நடத்தி வருகின்றனர். 

 ரயில் நிலையத்தின் மெயின் வாசலில் செவிலியர்கள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து அவர்களின் முகவரியினை பதிவு செய்து வருகின்றனர். இதற்காக பயணிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. 

கேரளாவில் மீண்டும் கொரோனா மற்றும் ஜிகா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அதிகளவில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today