தென்காசி , டிச.13:
தென்காசி மாவட்டம் சிவகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி பிரியங்கா தலைமையில் நடைபெற்றது. இதில் வாரிசு, கிரிமினல்,சிவில் வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. கிரிமினல் வழக்கு 326கோப்பு, எடுக்கப்பட்டது. 187 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் சிவில் வழக்குகள் 140 கோப்புக்கு, எடுக்கப்பட்டது. இதில்12 வழக்குகள் சமரசமாக தீர்வு காணப்பட்டது. இதில் மக்கள் நீதிமன்றம் உறுப்பினர்கள், வழக்கறிஞர் ஜவகர்லால் நேரு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், அரசுஅலுவலர்கள், துணை தாசில்தார் வெங்கடசேகர், நீதிமன்ற தலைமை எழுத்தார்கள் சித்ரா, கலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.cuddalore.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today