தென்காசி, நவ. 13:

தென்காசி மாவட்டத்தில் நாளை 14ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில்  நாளை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.  இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

இதை மனதில் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொது மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ், கேட்டுக்கொண்டுள்ளார். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/