நெல்லை,  அக்.12:

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை. பஸ் சரியான நேரத்தில் வராததால் அங்கிருந்து பாளையங்கோட்டை பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

 இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்  மணப்படை வீடு பகுதிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.  https://www.tnstc.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today