நெல்லை, அக்.23:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். 9 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
அம்பை யூனியன் தலைவராக சிவனு பாண்டியன், துணைத்தலைவராக ஞானகனி, சேரன்மாதேவி யூனியன் தலைவராக பூங்கோதை சீவலமுத்து, துணைத்தலைவராக ஆனந்தலட்சுமி, களக்காடு யூனியன் தலைவராக ஜா.இந்திரா, துணைத்தலைவராக விசுவாசம், மானூர் யூனியன் தலைவராக ஸ்ரீலேகா, துணைத்தலைவராக நயினார் முகமது சாபத்துல்லா,
பாளையங்கோட்டை யூனியன் தலைவராக கே.எஸ்.தங்கபாண்டியன், துணைத்தலைவராக முரளிதரன், பாப்பாக்குடி யூனியன் தலைவராக பூங்கோதை, துணைத் தலைவராக மாரிவண்ணமுத்து, ராதாபுரம் யூனியன் தலைவராக ஜெ.சவுமியா, துணைத்தலைவராக இளையபெருமாள், வள்ளியூர் யூனியன் தலைவராக ஞா.சேவியர் செல்வராஜா, துணைத்தலைவராக வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நாங்குநேரி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சவுமியா ஆரோக்கிய எட்வினும், அ.தி.மு.க. சார்பில் செல்வி லக்கனும் மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சவுமியா ஆரோக்கிய எட்வின் 11 வாக்குகள் பெற்று யூனியன் தலைவராக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி லக்கனுக்கு 5 வாக்குகள் கிடைத்தது. நாங்குநேரி யூனியன் தலைவர் பதவியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.
பின்னர் நடந்த யூனியன் துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இசக்கிபாண்டி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செந்தூர் பாண்டியனுக்கு 6 வாக்குகள் கிடைத்தது.
நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களிலும் தலைவர் பதவிகளை தி.மு.க.வினரே கைப்பற்றினர். ராதாபுரம் யூனியனில் துணை தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. மற்ற 8 யூனியன்களிலும் துணை தலைவர் பதவிகளை தி.மு.க.வினரே கைப்பற்றினர். https://www.tenkasi.nic.in , https://www.eic.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today