தென்காசி,  டிச.30:

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்டத்தில்  மதிய உணவு வேளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட பொருளாளர் ஆபேல்ராஜ்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். 

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.கே.மாடசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலைமுருகன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேஷ் நிறைவுரை வழங்கினர். முடிவில்  மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் நன்றியுரை வழங்கினார்.  https://www.tngou.com

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today