தென்காசி, சூலை 31:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது,
இந்த பாராட்டு விழாவிற்கு சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் நெடுமாறன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவர் அகத்தியன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் கொரானா பேசும்போது, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் ,மருத்துவமனை பணியாளர்கள் ஆய்வக நுட்பனர்கள் மற்றும் பாதுகாவலர்கள், ஓட்டுநர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் .
மேலும் கொரானா காலத்தில் அயராது உழைத்த 108 அவசர ஊர்தி பணியாளர்களையும், அமரர் ஊர்தி பணியாளர்களையும், காவல்துறை அலுவலர்களையும், தீயணைப்புத் துறை அலுவலர்களையும் வாழ்த்தி பாராட்டினார். மருத்துவமனையில் பணிபுரிந்த முன்கள பணியாளர் களை பாராட்டியதோடு அல்லாமல், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்திற்காக,. பணியாளர்களின் குடும்பத்தினரை பாராட்டினார்.
கொரானா காலத்தில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் நிதியுதவி நன்கொடையாக வழங்கிய ஸோகோ நிறுவனம், ரோட்டரி சங்கம், சாந்தி மருத்துவமனை, சேவாலயா நிறுவனம், திருநெல்வேலி கேன்சர் கேர் சென்டர் நலவாழ்வு மையம், அமர்சேவா சங்கம், வியாபாரிகள் நலச்சங்களுக்கு நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் வெள்ளைச்சாமி, மூத்த மருத்துவர் கிருஷ்ணன், பல் மருத்துவர் லதா, குழந்தைகள் மருத்துவர் கீதா, மகப்பேறு மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் கார்த்திக் அறிவுடைநம்பி, மருத்துவர் புனிதவதி, மருத்துவர் ராஜேஷ், மருத்துவர்கள் ரஜினிகாந்த், மாரிமுத்து, இர்பான், மல்லிகா, முத்துக்குமாரசாமி ,ராஜலஷ்மி ,மது, பாபு, அன்ன பேபி, தமிழரசன், மகேஷ் திருமலைக்குமார் ,ராம் சுந்தர், மணிமாலா, ரவிச்சந்திரன், ஆலிஸ் ரூத் மேரி,முசாம்மில், ஜோஸ் ஆண்ட்ரூ வளராய், பழனி, தமிழருவி, கிருத்திகா, அல்மாஸ் பானு, விக்னேஷ், கார்த்திக் ,ஜெரின், முத்துராமன், கோபிகா,சேதுபதி, மகிதா ஸ்ரீ, மணிகண்டன், பார்த்தசாரதி, சிவ நந்தினி,உமா மகேஸ்வரி, இந்துமதி, செவிலியர் கண்காணிப்பாளர் கள், மற்றும் மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் மருத்துவர் ராமசுப்பு மற்றும் மருத்துவர் முத்தையா, மருத்துவர் மகேஸ்வரி, மருத்துவர் இஸ்மாயில், மருத்துவர் சுப்பிரமணியம், மருத்துவர் முகைதீன் அகமது ஆகியோர் முன்கள பணியாளர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்கள்.
முடிவில் மருத்துவர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
நிருபர் நெல்லை டுடே