தென்காசி, ஆக. 25:

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவிகளுக்கு  ஒரு  மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது. 

மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ / மாணவிகளுக்கு தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின் www.training/tahdco.com  என்ற இணையதளத்தின் வழியே  பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மாணவ / மாணவியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு   SCVT/SSC SCVT/SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி  முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள்; தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடர்பான தொழில் தொடங்கிட   http://tahdco.application.comhttp://tahdco.application.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பத்தினை தொழில்முனைவோர் திட்டம் அல்லது இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயன்பெறலாம்.
 அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க ஆவண செய்யப்படும்.

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today