தென்காசி,  செப்.16-


அச்சன்புதூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


தென்காசி  மாவட்டம்கடையநல்லூர் வனச்சரகம் அச்சன்புதூர் அருகே மேக்கரை பிரிவு வெள்ளக்கல்தேரி பீட் எல்லைக்குட்பட்ட செந்நாய்பொத்தை பரம்பு பகுதியில்  கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் 
மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், கடையநல்லூர் பிரிவு வனவர் லூமிக்ஸ், சிறப்பு பணி வனவர் செல்லத்துரை, வனக்காப்பாளர்கள், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் டார்ச் லைட், வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிந்த பார்வதிபுரத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார் (வயது 22), அச்சன்புதூரை சேர்ந்த பக்ருதீன் (21), காசிதர்மத்தை சேர்ந்த சாமிபாண்டியன் (22), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.


அப்போது 4 பேரும் காட்டுப்பன்றியை வேட்டை யாடியது தெரிய வந்தது. வேட்டையாடிய காட்டுப்பன்றி, டார்ச் லைட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடையநல்லூர் வனத்துறையினர் வன வழக்குப்பதிவு செய்தனர்.


அதன் பின்னர் நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகனின் உத்தரவுப்படி வனத்துறையினர்4 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
மேலும் தப்பி ஓடிய 5 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/