மாம்பழத்தில் வெடி வைத்து
காட்டுப்பன்றி வேட்டை யாடியவருக்கு ரூ.30ஆயிரம் அபராதம்
தென்காசி, ஜூன் 3-
சிவகிரி அருகே மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டை யாடியவருக்கு வனத்துறையினர் ரூ.30ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வடக்குப்பிரிவு, தேவிப்பட்டிணம் பீட் பகுதியில் மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப்பன்றி வேட்டையாடப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிவகிரி ரேஞ்சர் டி.சுரேஷ் தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன், தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர்கள் திருவேட்டை, ராஜீ, சுதாகர், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தனித்தனிக்குழுவினராகச் சென்று தேடினர்.
அப்போது பேச்சியம்மன்கோவில்ஆறுபடுகையில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய தேவிப்பட்டிணம் நேரு வடக்கு தெருவைச் சேர்ந்த லிங்கமுத்து மகன் லிங்கராஜா (51) என்பவரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த இறந்த காட்டுப் பன்றியை பறிமுதல் செய்தனர் .இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடியலிங்கராஜாவிற்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நிருபர் நெல்லை டுடே