நிருபர் நெல்லை டுடே
தென்காசி ஜூன் 9-சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் டிராக்டர், வேளாண்மை கருவிகள் வழங்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நடப்புப்பருவத்தில் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை எதுவும் இல்லாமல் விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் மற்றும் வேளாண்மை கருவிகளை வழங்கும் திட்டத்தினை டிராக்டர்ஸ் அன்ட் பர்ம் எக்யுப்மென்ட்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ளது.
இத்திட்டம் வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரை செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வசதியை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் 18004200100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
விவசாயிகள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு வேளாண்மைத் துறையின் களப்பணியாளர்களையோ வட்டார / மாவட்ட அலுவலர்களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் அழைக்கும் விவசாயிகளின் தொடர்பு எண்கள் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு பணியாளர் வந்த பின்னர் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் உடனடியாக விவசாய இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் வாடகைக்கு பயன்படுத்த தேவையுள்ள விவசாயிகள் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே