தென்காசி, சூன் 12-
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி பிரிவு சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தல் 35 வயது வரை உள்ள 3 ஆலர்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விருது ரூ.50,000/– ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2021ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் 15.08.2021 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2021 (01.04.2021)அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2021 (31.03.2021) அன்று 35 வயதுக்குள்ளாகஇருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2020-2021) அதாவது 01.04.2020 முதல் 31.03.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.(சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். . மத்திய / மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
இவ்விண்ணப்ப தாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரீசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ண ப்பிக்க 30.06.2021 மாலை 4.00 மணி ஆகும். விண்ணப்பம் மற்றும்; விபரங்களை ஸ்பைரல் பைண்டிங் செய்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் அண்ணா விளையாட்டு அரங்கம், திருநெல்வேலி 30.06.2021 மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ண ப்பிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
நிருபர் நெல்லை டுடே